
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான்கு சக்கர வாகனத்தில் கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் மாரியம்மன் கோவில் சன்னதி தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி தலைமை தாங்கினார் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கந்தவேலு பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் வேனை கயிறு கட்டி இழுத்தும் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர் பின்னர் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டம் நடந்தது